spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிரைத்துறையில் 14 வருடங்கள் நிறைவு... மாநகரம் நடிகருக்கு வாழ்த்து...

திரைத்துறையில் 14 வருடங்கள் நிறைவு… மாநகரம் நடிகருக்கு வாழ்த்து…

-

- Advertisement -
பிரபல நடிகர் சந்தீப் கிஷன் திரைத்துறையில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். யாருடே மகேஷ் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள ராயன் படத்திலும், சந்தீப் நடித்திருக்கிறார். இதில் தனுஷூக்கு தம்பி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சந்தீப் நடித்த முதல் படமாக பிரஸ்தானம் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
we-r-hiring

மேலும், இது தொடர்பாக பதிவிட்ட சந்தீப், இந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாக குடும்பமாக மற்றும் ரசிகர்களாக என்னுடன் அன்புடனும், வலிமையுடனும் இருந்ததற்கு நன்றி. நான் விழும்போதெல்லாம் நீங்கள் என்னை மீண்டும் மேலே எழச்செய்தீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

MUST READ