Homeசெய்திகள்சினிமாயோகி பாபு, சுரேஷ் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய படம்.......பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

யோகி பாபு, சுரேஷ் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய படம்…….பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

-

யோகி பாபு தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய சுரேஷ் ரவியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சுரேஷ் ரவி கடந்த 2016ல் மோ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

இவர்களின் கூட்டணியில் உருவாகும் எந்த புதிய படத்தை பி ஆர் டாக்கீஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய கே பாலையா இயக்குகிறார். அயோத்தி படத்திற்கு இசையமைத்த என் ஆர் ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இதில் சுரேஷ் ரவி மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து ஆதுரா, ஆதித்யா கதிர், பிரிகிடா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ