spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமும்பையில் மூன்று வீடுகளை அடமானம் வைத்த நடிகை தமன்னா

மும்பையில் மூன்று வீடுகளை அடமானம் வைத்த நடிகை தமன்னா

-

- Advertisement -
தமிழில் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் விஜய், சூர்யா, அஜித்குமார், கார்த்தி, தனுஷ், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அதேபோல, தெலுங்கிலும் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் அவர் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து தமன்னா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்தியில் வேதா என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் ஒடேலா 2 படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.
நடிகை தமன்னாவுக்கு மும்பை அந்தேரி பகுதியில் வீர தேசாய் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 வீடுகள் உள்ளன. இதை இந்தியன் வங்கியில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு அவர் அடமானம் வைத்துள்ளார். மேலும், மும்பை ஜூஹூ பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் அலுவலகம் ஒன்றை 18 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ