spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவேட்டையன் அடுத்த கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 24-ல் தொடக்கம்

வேட்டையன் அடுத்த கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 24-ல் தொடக்கம்

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.

ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. அண்மையில் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாகும். வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரளங்களில் நடித்திருக்கின்றனர்.

we-r-hiring
படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடி்பபு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதியில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினி பிறந்தநாளையொட்டி, படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.

MUST READ