spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பு நிறைவுக்கு முன்பே டப்பிங்கை தொடங்கிய நடிகர் விஜய்

படப்பிடிப்பு நிறைவுக்கு முன்பே டப்பிங்கை தொடங்கிய நடிகர் விஜய்

-

- Advertisement -
தி கோட் படத்திற்கான டப்பிங் பணிகளை பாதி நிறைவு செய்துவிட்டார் நடிகர் விஜய்.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

we-r-hiring
இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் இப்படத்திலிருந்து விசில் போடு எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தி கோட் படத்திற்கான டப்பிங் பணியை 50 சதவிகிதம் நடிகர் விஜய் நிறைவு செய்து விட்டதாகவும், இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

MUST READ