spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட்.... பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..

ராஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட்…. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..

-

- Advertisement -
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் படம் உருவாகிறது. படத்திற்கு தி கேர்ள் ஃப்ரண்ட் என்று தலைப்பு வைத்துள்ளனர். வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்திற்கு இசை அமைத்த, அப்துல் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்டத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது

MUST READ