இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதாவது இவருடைய படங்களில் சாதி, அரசியல், கிராமிய பிரச்சினைகள் போன்ற சமூக உண்மைகள் மையக்கருவாக இருக்கும். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான அசுரன், விசாரணை, விடுதலை போன்ற படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியாக இவர், விடுதலை பாகம் 2 படத்தை இயக்கியிருந்தார். இதற்கிடையில் இவர், சூர்யாவின் நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் ‘STR 49’ திரைப்படம் உருவாகப் போவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான ப்ரோமோவை பார்க்கும் போது இந்த படம் ‘வடசென்னை’ யுனிவர்ஸ் படமாக உருவாகும் போல் தெரிகிறது.
இருப்பினும் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்குவாரா? அல்லது STR 49 படத்தை இயக்குவாரா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள், சூர்யா படம் – சிம்பு படம் இரண்டில் எது முன்னாடி வரும்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வெற்றிமாறன், “இன்னொரு பத்து நாள்ல சொல்றேன்” என்று பதிலளித்துள்ளார்.
- Advertisement -