விடுதலை படக் கூட்டணி மூன்றாவது முறை மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூரி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திரைப்படத்தை தொடங்கி பின்னர் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சூரிக்கு ஹீரோவாக நடிக்க பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதன்படி கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தது விலங்கு வெப் தொடரின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சூரி. இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படமும் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் விடுதலை படக் கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விடுதலை 1, விடுதலை 2 ஆகிய படங்களை ஆர் எஸ் இன்ஃபோடென்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். அடுத்தது இவர் மீண்டும் சூரி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம். அதன்படி நடிகர் சூரியின் அடுத்த படத்தை ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்பி படத்தின் இயக்குனர் மதிமாறன் இயக்கப் போவதாகவும் அதற்கு வெற்றிமாறன் தான் கதை எழுதுவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் சூரியின் புதிய படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சூரிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதனால் அவருடைய காட்டில் அட மழை தான் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.