நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதே சமயம் விஜய் சேதுபதி, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் பாண்டிராஜ். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை சந்தித்து அவரிடம் கதை கூறியதாகவும் இவர்களின் கூட்டணியில் விரைவில் புதிய படம் உருவாகும் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் படமானது ஒரு சில காரணங்களால் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை என்பதால் பாண்டிராஜ் விஜய் சேதுபதியிடம் சென்று அதே கதையை கூற விஜய் சேதுபதி உடனே ஒப்புக்கொண்டாராம்.
சமீபத்தில் இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இதன் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 14 அன்று தொடங்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


