விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மறைவிற்கு விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது மீராவின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Writing with a heavy heart and a wavery mind. The news of my dear friend and classmate actor @vijayantony’s daughter leaving this world all of a sudden and all of us behind is unimaginable and unable to digest. May her soul rest in peace. Dear Raja am always there for u as a…
— Vishal (@VishalKOfficial) September 19, 2023
அந்த வகையில் நடிகர் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில்,” கனத்த இதயத்துடன் எழுதுவது. எனது அருமை நண்பர், தோழர் விஜய் ஆண்டனியின் மகள் இவ்வுலகை விட்டு திடீரென பிரிந்து சென்றது ஜீரணிக்க முடியாத செய்தியாகும். அன்புள்ள ராஜா, ஒரு நண்பனாகவும் சகோதரனாகவும் நான் உங்களுக்காக இருக்கிறேன். தைரியமாக இருங்கள். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. எந்த வார்த்தைகளாலும் உங்களை அமைதி படுத்தவோ சமாதானப்படுத்தவோ முடியாது. மொத்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகத்தில் இருந்து நீங்கள் மீண்டு வர கடவுள் உங்களுக்கு போதுமான சக்தியை கொடுக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த வார்த்தைகளை வெறுமையான மனதுடன் விட்டு செல்கிறேன்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.