சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு அடுத்ததாக அரசன் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சிம்புவின் 49வது படமாகும். இதனை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தது இதன் முன்னோட்டத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக இருக்கும் இந்த படமானது ‘வடசென்னை’ யுனிவர்ஸாக உருவாக இருக்கிறது என வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி ஆரம்பத்தில் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது.
அதன் பின்னர் வெளியான தகவல் என்னவென்றால், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீலீலா ஆகிய மூவரில் யாரிடம் கால்ஷீட் கிடைக்கிறதோ அவர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்படுவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு குறித்த கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி இந்த மாதம் 17ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.