- Advertisement -
கன்னட திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரை உலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். குறுகிய வட்டத்தில் 15 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருந்த யாஷை, கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 படமும் அவரை வெற்றி நாயகனாக கொண்டாட வைத்தது. இன்று உலகமே அடையாளம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நடிகர் யாஷ் உயர்ந்திருக்கிறார். கேஜிஎஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து யாஷ் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இத்திரைப்படம கோவாவில் போதைப் பொருள் நடத்தும் கும்பலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. ஆக்ஷன் நிறைந்த ஒரு படமாக இது தயாராகி வருகிறது. டாக்சிக் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள இப்படத்தில் யாஷூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிப்பதாகவும், அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.





கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இத்திரைப்படம கோவாவில் போதைப் பொருள் நடத்தும் கும்பலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. ஆக்ஷன் நிறைந்த ஒரு படமாக இது தயாராகி வருகிறது. டாக்சிக் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள இப்படத்தில் யாஷூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிப்பதாகவும், அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.