சர்வதேச திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழு மலை…. இன்று திரையிடல்…
- Advertisement -
ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் இன்று நடைபெற உள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று ஒளிபரப்பப் பட உள்ளது.

கோலிவுட் திரையுலகில் ராமின் இயக்கம் தனித்துவம் வாய்ந்தது. அவரது திரைக்கதையும், வசனங்களும், கண்ணோட்டமும் மாறுபட்டது. அவரது திரைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கற்றது தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ராம், அடுத்தடுத்து தங்க மீன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். தரமணி, பேரன்பு ஆகியவை ராம் இயக்கிய திரைப்படங்கள். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இதில் பிரபல மலையாள நட்சத்திரம் நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றன. ஆனால், போஸ்டர் தவிர அப்டேட் எதுவும் வராமல் இருந்தன. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகின. இப்படத்தின் கதாபாத்திர அறிமுக புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து, படத்தின் டீசர் வெளியானது. கிளிம்ப்ஸ் வீடியோவாக படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4 வரை, நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் இடத்தில் இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று நிகழ்ச்சியில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதைக் காண நடிகர் சூரி உள்பட படக்குழுவினர் ரோட்டர்டாம் சென்றுள்ளனர்.