spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்

காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோ நிர்மல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஷியாம், தயாநிதி, மாறன், தென்னரசு, மாணிக்கம் ஆகிய 6 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

we-r-hiring

தாயிடம் தகராறு செய்த மகனை கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை கைது

தொடர்ந்து, நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனுர் பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரை நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையான போலீசார் கைது செய்தனர். அப்போது, காவலர் விக்னேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு மனோ நிர்மல்ராஜ் தப்பியோட முயன்றார்.

உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு முன்னெச்சரிக்கை விடுத்தும், அதனை மனோ நிர்மல்ராஜ் பொருட்படுத்தாததால் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தொடர்ந்து காயம் அடைந்த மனோ நிர்மல்ராஜ் மற்றும் காவலர் விக்னேஷ் ஆகியோர் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிகக்கப்பட்டு வருகிறது.

 

 

 

MUST READ