சென்னையில் 25 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பில் இரண்டு யானைத் தந்தம் பறிமுதல் சுங்குத்துறை அதிகாரிகள் கடத்தல் காரர்கள் போல் நாடகமாடி கைது செய்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள யானை தந்தம் 50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசப்பட்டதாக கூறப்படுகிறது.2022 கர்நாடக நகைக்கடை உரிமையாளர்கள் விலங்கு தொடர்பான பொருட்களை கடத்துவதாக வெளியான தகவல் மூலம் நடந்த விசாரணையில், ஓய்வு பெற்ற ஐஜி முன்னாள் மருமகன் அடமானம் செய்ததாக தகவல் வெளியானது. அடமானம் வைத்த யானைத் தந்தத்தை மீட்க முடியாததால், கடத்தல் காரர்களிடம் விற்பனை செய்ய முயன்ற போது, கையும் களவுமாக சிக்கிய கடத்தல் காரர்கள் 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(58). இவர் சவுகார்பேட்டையில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுக்கு முன் இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜி யின் முன்னாள் மருமகன் என்பவர் 5 லட்ச ரூபாய்க்கு இரண்டு யானை தந்தங்களை அடமானம் வைத்து பணம் வாங்கி சென்றுள்ளார்.
பணம் திருப்பி செலுத்த வேண்டிய கால அவகாசம் முடிந்தும், அடமானம் வைத்த யானை தந்தத்தை மீட்கவில்லை. இதனால், பிரபாகரன் இரண்டு யானை தந்தங்களை தரகர்கள் மூலம் விற்க முயற்சி செய்துள்ளார். இது குறித்த தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, யானை தந்தத்தை வாங்கும் கடத்தல் காரர்கள் போல் சுங்கத்துறை அதிகாரிகள் நாடகமாடியுள்ளனர். போர்ட் கிளப்பிலுள்ள தரகர் ஒருவர் மூலமாக ஓய்வு பெற்ற ஐஜி முன்னாள் மருமகனை தொடர்பு கொண்டு நகைக்கடை உரிமையாளரை அணுகியுள்ளனர். பல கோடி மதிப்புள்ள இந்த தந்தங்களை 50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியதாக கூறப்படுகிறது.
இன்னோவா காரில் இரண்டு தந்தங்களையும், கேகே நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் விற்பனை செய்ய முயன்ற போது கடத்தல் காரர்கள் போல் நடித்துக் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக யானை தந்தத்தை விற்பனை செய்தவர்களை கைது செய்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் நகைக்கடை உரிமையாளருக்கு நெருக்கம் என்பதால், அதிகாரிகளிடம் கைது நடவடிக்கையை தடுக்க மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் கடத்தல் விவகாரம் என தெரிய வந்ததையடுத்து, காவல்துறை அதிகாரி பின்வாங்கியுள்ளார். பிரபாகரன் உள்ளிட்டோரை வரவழைத்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் திவாகர்(40) என்பதும் இவர்கள் தரகர்களான சுரேஷ்(40), செல்வகுமார்(38), ஆனந்தன்(56), குரு பிரசாத்(39), சுரேஷ்பாபு(45), ஆகியோர் விற்க முயன்றது உறுதியானது.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பிடிப்பட்ட ஏழு பேரையும், பறிமுதல் செய்த இரண்டு யானை தந்தத்தையும் வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள், வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ், அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது