Homeசெய்திகள்க்ரைம்முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! பகீர் பின்னணி

முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! பகீர் பின்னணி

-

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.

dmk ex mp masthan

இவர் கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே வந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மஸ்தானின் மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மஸ்தானின் கார் ஓட்டுநர் இம்ரான் உள்ளிட்ட 5-பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில்,

மஸ்தானின் தம்பி மருமகனான இம்ரானுக்கு கடந்த 8-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சித்த மருத்துவரான இம்ரான் எம்பி மஸ்தானி டம் 13.50-லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். மஸ்தான் தனது மகனின் திருமண செலவிற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி அளிக்க முடியாததால் மஸ்தானை கொலை செய்ய முடிவெடுத்து அவரது கார் ஓட்டுனராக இம்ரான் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காலை மஸ்தான் தனது மகனின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக திருச்சி நோக்கி சென்றுள்ளார். அப்போது இம்ரான் தனது உறவினரான சுல்தானிடம் கூறி கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளான். அதில் நசீர் அகமது, தவ்பீக், லோகேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். செங்கல்பட்டு அருகே வந்த போது சித்த மருத்துவம் பயின்ற இம்ரான் மஸ்தானின் முகத்தை அமுக்கியும், சுல்தான் உள்ளிட்ட மற்றவர்கள் அவரது கை மற்றும் கால்களை அழுத்தி பிடித்துள்ளனர்.

தொடர்ந்து கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறி அவரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தி இருந்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து மஸ்தானின் மகன் அவரது உடலை பார்க்கும்போது மஸ்தானின் மூக்கில் லேசான கீறல் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த மகன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இதற்காக இம்ரான் கூலிப்படையை அமைக்க சுல்தானிடம் 15-லட்சம் பேரம் பேசி 1-லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

இம்ரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக காவல்துறையினருடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய இம்ரான் சுல்தான், நசீர், தவ்பீக், லோகெஷ். ஆகிய 5 பேர் கைது செயது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜ் படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்தின் அடிப்படையில் இந்த வழக்கில் திரும்பம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவித்தனர்.

MUST READ