Homeசெய்திகள்க்ரைம்பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடி

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடி

-

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடி

பேஸ்புக் மூலம் லிங்க் இந்தியா முழுவதும் 44 பேரிடம் 7.5 கோடி மோசடி – மத்திய அரசு ஊழியரிடம் 40 லட்சம் மோசடியில் ஈடுபட்டதால் அவர் அளித்த புகாரின் பேரில் செக் வைத்த ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடிசென்னை மாங்காட்டை சேர்ந்தவர் மனோரஞ்சன் குமார். இவர் மத்திய சுங்கவரி மற்றும் களால் வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓய்வு நேரங்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் நேரத்தை செலவழிப்பது வழக்கம். அந்த வகையில் முகநூலை கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முகநூல் பயன்படுத்திய போது அதில் வந்த வர்த்தக விளம்பரம் ஒன்றை கண்ட அவர் அதிலிருந்த லிங்கை தொடர்ந்து ஆசிஷ் சஹாஸ் டால் ஸ்ட்ரீட் ட்ரேடிங் சாம்பியன்ஸ் வி.ஐ.பி 2 என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டார்.

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடி

அதன் வாயிலாக செஸ் செஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழிகாட்டுதலின்படி பல்வேறு பங்குகளை வாங்க கூறியதை அடுத்து அடுத்தடுத்து பங்குகளை பெறுவதற்காக பல்வேறு வங்கி கணக்கு மற்றும் upi id மூலம் பணம் செலுத்தி வாங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 39 லட்சம் இழந்ததை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து ஆவடி காவல் ஆணையராக மத்திய குற்ற பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். புகாரை விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குஜராத் விரைந்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் குஜராத் மாநிலம் ஆனந்தை பகுதியை சேர்ந்த பிரேம் ராம் என்பவனை கைது செய்தனர்.

பேஸ்புக் லிங்க் மூலம் 7.5 கோடி மோசடி

அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 44 நபர்களை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏமாற்றி சுமார் 7.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரேம் ராமை கைது செய்து சென்னை அழைத்து வந்த போலீசார் அவனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

https://www.apcnewstamil.com/news/crime-news/erode-using-ex-mlas-name-lakhs-of-rupees-fraud-through-mobile-phone/83617

தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய கூட்டாளிகளை ஓரிரு வாரத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ