திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சியில் ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 27). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற மே மாதம் இருபத்தைந்தாம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் விக்னேஷ் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலின் பெயரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் இவ்வழக்கை பதிவு செய்து விக்னேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் மேற்கொண்டனர்.
அப்போது திடுக்கிடும் சில தகவல் கிடைத்துள்ளது. சங்ககிரி குப்தா காலனியில் புதிதாக கட்டபட்டு வந்த வீட்டிற்க்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்ற பொழுது வீட்டின் உரிமையாளரான அஸ்மா என்ற திருநங்கைக்கும் விக்னேஷுக்கும் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை மணப்பெண் பிரியதர்ஷினிக்கு திருநங்கை அஸ்மா அனுப்பி வைத்து விக்னேஷ் தனது கணவர் என்றும் நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மணப்பெண்ணிடம் மிரட்டியதாகவும், இதனால் மணப்பெண்ணின் பெற்றோர்கள் மணமகனின் வீட்டிற்கு வந்து இதைப்பற்றி விசாரித்து திருமணத்தை நிறுத்த பேசிக்கொண்டிருந்தபொழுது அஸ்மா தனது தோழிகளுடன் விக்னேஷின் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும் விக்னேஷின் பெற்றோரை மாமனார். மாமியார் மற்றவர்களை உறவு வைத்து அழைத்ததாகவும் தெரிகிறது.

அப்பொழுது வெளியில் சென்றிருந்த விக்னேஷ் வீட்டிற்க்கு வந்த உடன் நடைபெற்ற சம்பவங்களை அறிந்து மனமுடைந்து விக்னேஷ் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சங்ககிரி அருகே திருமணம் நடைபெற 4நாட்கள் உள்ள நிலையில் திருநங்கையின் தகாத உறவால் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.