Homeசெய்திகள்க்ரைம்மக்களே உஷார்... ஒரே ஒரு போன் கால்: ரூ.10 கோடியை இழந்த முதியவர்

மக்களே உஷார்… ஒரே ஒரு போன் கால்: ரூ.10 கோடியை இழந்த முதியவர்

-

- Advertisement -

77 வயதான ஓய்வு பெற்ற பொறியாளரை டிஜிட்டல் மோசடிக்கு பலியாக்கி ரூ.10 கோடிக்கு மேல் ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோசடி செய்தவர்கள் அந்த முதியவரை 19 நாட்கள் பிணைக் கைதியாக வைத்திருந்ததாகவும், மனதளவிலும், உடல் அளவிலும் கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 25 அன்று, தனக்கு ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், இங்குதான் தனது பிரச்சனைகள் தொடங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். நான் பொதுவாக தெரியாத எண்களில் இருந்து அழைப்புகளை எடுப்பதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்று நான் அழைப்பை எடுத்தேன். மும்பையில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் திரும்பியதாக அழைப்பாளர் தெரிவித்தார். நான் அப்படி எந்த பார்சலையும் அனுப்பவில்லை என்று கூறியபோது, ​​அந்த பார்சலில் தனது ஆதார் கார்டு தகவல் பதிவாகியிருப்பதாக அழைத்தவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் புகார் அளிக்கும் வகையில் மும்பை போலீஸாரிடம் பேச வீடியோ அழைப்பில் அழைத்தேன். வீடியோ அழைப்பில், மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னால் ஒரு நபர் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறினார். அந்த நபரிடம் முழு சம்பவத்தையும் அவர் தெரிவித்தேன். அதன் பிறகு அந்த நபர் நான் பொய் சொல்கிறேன் என்றும் எனது தகவல்களை உறுதிப்படுத்த எனது வங்கி தகவல் தேவை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த அழைப்பு வேறொரு நபருக்கு மாற்றப்பட்டது, அவர் தன்னை சிபிஐ மூத்த அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கட்டளையிடும் குரலில் பேசினார்.

சைபர் தாக்குதல்கள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் அதிர்ச்சி!

எங்கள் உரையாடலை யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக என்னை ஒதுக்குப்புற அறைக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டார். என்னிடம் பல கேள்விகள் கேட்டார். பின்னர், அவர் என்னிடம் சில ஆவணங்களைக் காட்டினார். அதில் ஒன்றில் எனது ஆதார் தகவல் இருந்தது. இந்த சம்பவத்தை தங்கள் குழந்தைகளிடம் அல்லது வேறு யாரிடமாவது கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி மிரட்டினார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு படித்த, உயர் தகுதி வாய்ந்த பொறியாளர். தனது தொலைபேசி கண்காணிப்பில் இருப்பதாக அவர்கள் கூறினர். அடுத்த நாள், பாதிக்கப்பட்டவர் அமலாக்க இயக்குனரகத்தின் அதிகாரி ஒருவரிடம் பேச வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தனக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார் அந்த அதிகாரி. செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 14 வரை அவர்கள் என் மனதையும் உடலையும் முழுமையாகக் கட்டுப்படுத்தினர். விசாரணை நடந்து வருவதாக மோசடி செய்பவர்கள் தெரிவித்தனர். பணத்தை மாற்றுமாறு கூறிவிட்டு, மூன்று தவணைகளில் ரூ.10.3 கோடியை மாற்றிக் கொண்டனர்.

நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த நான் என் சகோதரனிடம் கூறினேன். அவர் ரோகிணி மாவட்ட போலீஸ் சைபர் செல்சில் புகார் செய்தார். எனது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினரிடம் இந்த சம்பவம் குறித்து பேச நான் பயந்தேன். என் மனைவியும் பயந்தாள். அதற்குள் காலதாமம் ஆகிவிட்டதாகவும், தனது முதலீடுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. என் பணமெல்லாம் போய்விட்டது’’ என்றார்.

டெல்லி காவல்துறையின் ஐஎஃப்எஸ்ஓ பிரிவு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விரைவில் இந்த வழக்கில் பெரிய திருப்புமுனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ