Homeசெய்திகள்க்ரைம்காரைக்குடியில் டாக்டரை கடத்தி ஒரு கோடி கேட்டு மிரட்டல் - 3பேர் கைது

காரைக்குடியில் டாக்டரை கடத்தி ஒரு கோடி கேட்டு மிரட்டல் – 3பேர் கைது

-

- Advertisement -

ஒரு கோடி கேட்டு காரைக்குடி டாக்டரை மிரட்டிய வழக்கு மூன்று பேர் கைது முக்கிய குற்றவாளியான டாக்டரின் நண்பர் தொடர்ந்து தலைமறைவு.

காவல்துறை அதிகாரி மாறியதும் வழக்கு சூடு பிடித்த நிலையில் உயர்நீதிமன்றத்தால் ஜாமின் மறுக்கப்பட்டு 12 நாட்களுக்கு பிறகு சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காரைக்குடி தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரபல தனியார் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் குமரேசேன் இவரும் காரைக்குடி, மற்றும் அருகிலுள்ள ஊர்களில் மொபைல் கடைகளின் உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளருமான லேனா சுப்பு என்ற சுப்பிரமணி யும் பால்ய சிநேகிதர்கள் என்று கூறப்படுகிறது

இவர்களுக்குள் உள்ள நட்பு ஊர் அறிந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் விருந்து வைத்து கொள்வதும் அந்த விருந்தில் காரைக்குடியை சேர்ந்த வசதி படைத்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் பங்கேற்பதும்  காரைக்குடியில் பல்வேறு தரப்பினருக்கும் காவல் துறையினரும் அறிந்த விசயமாக இருந்த நிலையில் , கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென டாக்டர் குமரேசனை  ஊருக்கு ஒதுக்கு புரமாக உள்ள தன்னுடைய பஃப் க்கு அழைத்து இளம்பெண்ணுடன் இணைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ஒரு கோடி கேட்டு சித்ரவதை செய்ததாக தகவல் தீயாய் பரவியது

இது தொடர்பாக இரு தரப்பினருடனும் சமரச முயற்சியை அவர்களுடன் தொடர்புடை சிலர் மேற்கொண்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து நான்கு நாட்கள் கழித்து டாக்டர் குமரேசன் தன் கைபட காவல் துறையில் அளித்த புகாரை ரகசியமாக வைத்துக் கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணை நடைபெறுவதை அறிந்த சம்பவத்தில் தொடர்புடைய லேனா சுப்பு என்ற சுப்பிரமணி உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.

மொபைல் கடையில் வேலை செய்பவர்கள் சம்பவ நேரத்தில் இருந்த இளம் பெண்ணின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போலீசார் சுப்பிரமணி வீடு, நிறுவனங்களிலும் விசாரணைனையை தொடங்கினர்.

அப்போது சில விலையுயர்ந்த சொகுசு கார்களை போலீசார் கைப்பற்றியதாகவும் குற்றவாளிகள் சிக்காத நிலையில் அந்த கார்களை ரகசிய இடத்தில் வைத்திருந்தனர்.

இதனிடையே சுப்புவின் தாயார் லெட்சுமி தென்மண்டல ஐஜியிடம்
இது குறித்து தனது மகன் மீது டாக்டர் தவறான புகார் அளித்திருப்பதாகவும் டாக்டரும் டாக்டரது அண்ணன் (இவரும் டாக்டர்) இணைந்து நடத்தும் மருத்துவமனையில் டாக்டரின் அண்ணன் கணக்கு வழக்குகளை சரியாக கையாளவில்லை அதனை எப்படி சரி பார்பது என்று கணக்கு வழக்குகள் சரிபார்பதற்காக வந்த நிலையில் இதனை அறிந்த டாக்டரின் அண்ணன் அடியாட்களை அனுப்பி கணக்கு வழக்குகளில் உதவிய பெண்ணை இணைத்து புகைப்படம் எடுத்ததாகவும் இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து அண்ணனும் தம்பியும் இணைந்து உதவ சென்ற என் மகன் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டாக்டர் குமரேசன் அளித்த புகாரில் லேனா சுப்பு மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்த போலீசார் வழக்கு குறித்த விபரங்களை ரகசியமாக வைத்திருந்தனர்

குற்றவாளிகள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை மூன்று முறை அணுகியபோதும் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில்
போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது.

இதனிடையே உதவி காவல் கண்காணிப்பாளராக (Asp) அனிகேத் அசோக் கடந்த 17 ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில்
மூன்று பேரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ள போலீசர், கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துளளனர். இந்த கைது சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ