Homeசெய்திகள்க்ரைம்சைஃப் அலிகான் தாக்குதல்… வறுமையால் கழுதை வழியை தேர்ந்தெடுத்த குற்றவாளி..!

சைஃப் அலிகான் தாக்குதல்… வறுமையால் கழுதை வழியை தேர்ந்தெடுத்த குற்றவாளி..!

-

- Advertisement -

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறை விசாரணையின் போது அவர் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ‘கழுதை’ வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், வங்கதேசத்திலிருந்து உமன்கோட் நதி என்று அழைக்கப்படும் டவ்கி நதியைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

முகமது ஷரிபுல் இஸ்லாம் ஏழு மாதங்களுக்கு முன்பு டவ்கி நதியைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தார். அவர் மேற்கு வங்காளத்தில் சில வாரங்கள் தங்கியிருந்தார். இந்த சிம் கார்டு, வங்காளவாசி ஒருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளது.அதன் பிறகே வேலை தேடி மும்பைக்கு வந்துள்ளார் ஷரிபுல். அவர் பயன்படுத்திய சிம் கார்டு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ‘குக்ரமோனி ஜஹாங்கிர் ஷேக்’ என்பவரின் பெயரில் இருப்பதும், அவரது ஆதார் அட்டை புலனாய்வு அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குற்றவாளி ஷரிபுல் இஸ்லாம் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களுக்கு பலமுறை பயணம் செய்திருப்பதையும் விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன. ஷரிபுல் இஸ்லாம், வங்கதேசத்தில் 12 ஆம் வகுப்பு வரை படித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். அவர் வேலை தேடி மேகாலயாவில் இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள டாவ்கி நதியைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.இந்தியாவில், அவர் விஜய் தாஸ் என்ற போலி பெயரில் உலா வந்துள்ளார்.

சைஃப் அலி கான் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடமான சத்குரு ஷரணுக்குள் நுழைவதற்கு முன்பு, ஷரிஃபுல் மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்குச் சொந்தமான பங்களாவுக்குள் நுழைய முயற்சித்த போது நாய்கள் குரைக்க ஆரம்பித்ததும் குற்றவாளி ஓடிவிட்டான். இந்த அத்துமீறல் சம்பவம் 3 முதல் 4 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் காட்சிகள் தெளிவாக இல்லை. இந்த பங்களா ஷாருக்கானுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில்,குற்றம் சாட்டப்பட்ட ஷரிபுல் இஸ்லாம் 200 மீட்டர் நீளமுள்ள ஆற்றைக் கடந்து மேகாலயாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. பின்னர் மேகாலயாவில் இருந்து நான் கொல்கத்தா சென்றேன். கொல்கத்தாவில், அவர் வேறொருவரின் பெயரில் ஒரு சிம் கார்டை எடுத்து, தனது ஆதார் அட்டையையும் மோசடியாகத் தயாரித்துள்ளார்.

நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

அதற்கு முன்பாக ஷரிபுல் வங்காளதேச எல்லை வழியாக வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த 500 கிலோமீட்டர் நீள எல்லையைக் கடப்பதில் ஒரு ஆபத்து இருந்தது. அதனால்தான் அவர் இந்த ரிஷ்கை எடுக்கவில்லை. குடும்பத்திற்காக சம்பாதிக்கும் ஒரே நபராகவும் அவர் இருந்துள்ளார். அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, தனது வயதான தாய், சகோதர சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்துள்ளது. அதனால்தான் அவர் இன்னும் திருமணம்கூட செய்து கொள்ளவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட ஷரிபுல் சிறந்த நீச்சல் வீரரும் கூட. அனாலும், தொழில்முறை குற்றவாளியாகவும் இருந்துள்ளார்.அவர் 10வது மாடியிலிருந்து 11வது மாடிக்கு குழாய் வழியாக ஏறிய விதம் இதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் ஷெரிபுல் சிம் கார்டைப் பயன்படுத்திய நபரையும் கொல்கத்தா போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கும், மும்பையிலிருந்து தானேக்கும், தனது ஆவணங்களை உருவாக்குவதற்காக ஷரிபுல் பல ஏஜெண்டுகளை சந்தித்திருக்கிறார்.இது மட்டுமல்லாமல், இந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான சூழல் பதட்டமான பிறகு, ஷரிபுல் வங்கதேசத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பி இருக்கிறார். இதற்காக அவர் ஒரு பாஸ்போர்ட்டை உருவாக்க திட்டமிருந்தார். இந்த வேலைக்கு அவருக்கு பணம் தேவைப்பட்டது. அவர் வங்கதேசத்திற்குச் சென்று இந்தியாவுக்குத் திரும்பி வர விரும்பவில்லை. ஆனால், அதற்கு முன்பே அவர் சைஃப் அலிகான் வழக்கில் சிக்கிக் கொண்டார்.

MUST READ