spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா

நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா

-

- Advertisement -

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார். இந்த திருவிழா நாமக்கல்- திருச்செங்கோடு சாலையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, அறிவியல் கோளரங்கம், மீன்கள் காட்சியகம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

we-r-hiring

தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்கங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சின்ராஜ் 1 லட்சம் ரூபாய் ஆட்சியரிடம் வழங்கினார்.

MUST READ