சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அப்போதைய மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர், கடந்த சில காலத்திற்கு முன்பு காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு நடந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காவல் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் டி.எஸ்.பி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
இக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்போதைய மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்குப் (IPC 302 / BNS) பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிரடி உத்தரவால் பரப்பரப்பு
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது நேரடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சட்டப் போராட்டத்தில் இறந்துபோன அஜித்குமாரின் குடும்பத்தினருக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை பாஜகவில் வெடித்த பூசல்! ரூ.38 லட்சம் மோசடி.. அஸ்வத்தாமன் மீது பாய்ந்தது பகீர் புகார்!
