spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

-

- Advertisement -

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

we-r-hiring

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது மூதாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

மேலும், சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

ஏற்கனவே கடந்த 5ஆம் தேதி 55 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் இந்த வாரத்தில் மட்டும் இன்றுடன் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் கோவை மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ