Homeசெய்திகள்இந்தியாமுதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

-

- Advertisement -

முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்வு நாளை மறுநாள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வை எழுத உள்ளனர்.

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! - வைகோ கண்டனம்

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான தேர்வு மையம் பல ஆயிரம் கிலோ மிட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நாளை மறுநாள் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் நீட் தேர்வு மதிப்பெண் மதிப்பிடும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் சமுக வலைதளங்களில் கசிந்தாகவும், 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், 5 மனுதாரர்களின் கோரிக்கைக்காக 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவதை தள்ளிவைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த உச்சநீதிமன்றம், முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

 

MUST READ