Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை

திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை

-

திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 22.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.120.05 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Tirumala temple TTD

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.120.05 கோடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 9.07 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

1.09 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 43.07 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.

MUST READ