Homeசெய்திகள்இந்தியாஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

ஜம்மு – காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

-

- Advertisement -

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் இன்று காலை அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் இன்று காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, 7 நிமிட இடைவெளியில் பாராமுல்லாவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவானது.

பாராமுல்லாவில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ