உத்தரகாண்டில் 6 ஆயிரம் மீட்டர் உயர மலைச் சிகரத்தில் சிக்கித்தவித்த 2 வெளி நாட்டு மலையேற்ற வீராங்கனைகளை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுள்ளது
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள சவுகாம்பா -3 மலை சிகரத்தில் ஏறும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை மிச்சேல் தெரசா, இங்கிலாந்தை சேர்ந்த வீராங்கனை ஃபே மேனர்ஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
6,995 மீட்டர் உயரம் கொண்ட சவுகாம்பா -3 மலைச் சிகரத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது, கடந்த 3-ஆம் தேதி இருவரும் கொண்டு சென்ற மலையேற்றத்திற்கான கருவிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தவறவிட்டனர். இதனால் சிகரத்தின் மீது ஏற முடியாமல் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் 3 நாட்களாக இருவரும் சிக்கித்தவித்தனர்.
இதனிடையே, சிகரத்தில் மலையேற்ற வீராங்கனைகள் இருவரும் சிக்கித் தவிப்பதை அறிந்த பிரான்ஸ் மலையேற்றக் குழுவினர், இதுகுறித்து இந்திய விமானப்படைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், விமானப் படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் மலைச்சிகரத்தில் இருந்த மிச்சேல் தெரசா, ஃபே மேனர்ஸ் ஆகியோரை பத்திரமாக மீட்டு, முகாமுக்கு அழைத்துவந்தனர். தற்போது இருவரது உடல்நிலம் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.