
பெங்களூருவில் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினர் புகுந்து தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சித்தார்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த அரங்கிற்குள் திடீரென புகுந்த கன்னட அமைப்பினர் சிலர், தகராறு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தரக்குறைவாகப் பேசியதோடு, நடிகர் சித்தார்த்திடமும் தகராறு செய்துள்ளனர். எனினும், நடிகர் சித்தார்த், கன்னட மொழியில் அவர்களுக்கு பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் தகராறு அதிகரித்ததால், செய்தியாளர்களை நோக்கி விரல்களை உயர்த்திக் காட்டி, வணக்கம் எனக் கூறிவிட்டு, நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.
நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், கன்னட அமைப்பினரின் இதுப்போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான் எதிர்ப்புச் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகிவிடுகிறது.