spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசரத் பவாருக்கு அதிர்ச்சிக் கொடுத்த அஜித் பவார்!

சரத் பவாருக்கு அதிர்ச்சிக் கொடுத்த அஜித் பவார்!

-

- Advertisement -

 

சரத் பவாருக்கு அதிர்ச்சிக் கொடுத்த அஜித் பவார்!
Photo: Ajit Pawar

நாகாலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் உள்பட 9 பேர், ஆளும் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக அஜித் பவாரும், அவரது ஆதரவாளர்களான எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். அத்துடன், தனக்கு 30- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறி, ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் வழங்கியிருந்தார்.

இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நாகாலாந்தில் மாநில மற்றும் மாவட்டத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், அந்த கட்சியின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள், அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சரத் பவாரை, துணை முதலமைச்சர் அஜித் பவார் நேரில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், அவருக்கு அதிர்ச்சியை அஜித் பவார் ஏற்படுத்தியுள்ளார்.

களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை!

ஏற்கனவே, தனக்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால், தேசியவாத கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமைக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அஜித் பவார் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ