பஞ்சாப்பில் பாஜக கூட்டணியில் இணைய சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்த தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.
பஞ்சாப்பில் பாஜக கூட்டணியில் இணைய சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பஞ்சாபில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் ஜாகர் அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த்லில் பாஜக – சிரோமனி அகாலி தளம் இணைந்து போட்டியிட்டன. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை முறித்திருந்தது நிலையில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.