டெல்லியில் பாஜக தனித்து நின்று 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது.


இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அனுதாபத்தை சேர்த்தது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களான பிரவீன் கந்தெல்வால்- சாந்தினி சௌக் தொகுதி, ஹர்ஷ் மல்ஹோத்ரா- கிழக்க டெல்லி தொகுதி, சுபான்சூரி ஸ்வராஜ் – புது டெல்லி தொகுதி, மனோஜ் திவாரி – வடகிழக்கு டெல்லி தொகுதி, யோகேந்திர சாண்டேலியா- வடமேற்கு டெல்லி தொகுதி, திருமதி கமல்ஜீத் ஷெராவத் – மேற்கு டெல்லி தொகுதி, ராம்வீர் சிங் பிதூரி – தெற்கு டெல்லி தொகுதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணியை முற்றிலுமாக துடைத்தெறிந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.


