Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடுவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல்!

சந்திரபாபு நாயுடுவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

 

சந்திரபாபு நாயுடுவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல்!
Video Crop Image

ஊழல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை வரவேற்கக் குவிந்த அவரது ஆதரவாளர்களால் ஹைதராபாத்தில் வாகனங்கள் அணி வகுத்து நின்றனர்.

தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைதாகி ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து, 53 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு தொண்டர்கள் வழியெங்கும் வரவேற்பு அளித்தனர். ஹைதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை எடுக்கவுள்ளார்.

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

இதற்காக, ஹைதராபாத் விமான நிலையம் வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் இல்லம் வரை சந்திரபாபு நாயுடுவின் காரைப் பின் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

MUST READ