முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா இன்று(மே -04) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ரேவண்ணாவின் முன் ஜாமின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவரை, கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வு பிரி போலீசார் கைது செய்தனர்.