Homeசெய்திகள்இந்தியாநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

-

- Advertisement -

 

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!
File Phot

கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என பல்வேறு நீதிமன்றங்கள் அறிவித்திருந்தன.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!

தேர்தலை நடத்துவதும் அதன் முடிவுகளை அறிவிப்பதும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வேலை என்றாலும், தேர்தல் சரியாக நடத்தப்பட்டிருக்கிறதா? முறைகேடுகள் எதுவும் இல்லாமல், நியாயமான முறையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது.

அதன் அடிப்படையில், பல்வேறு தருணங்களில் தேர்தல் வெற்றி செல்லாது என இந்திய நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன. கவுன்சிலர் தேர்தல் தொடங்கி குடியரசுத் தலைவர் தேர்தல் வரை தேர்தல்கள் முறையாக நடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த 1971- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி முறைகேட்டில் ஈடுபட்டார் என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜநாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். குறிப்பாக, இந்திரா காந்தியின் தேர்தல் முகவராக செயல்பட்ட யாஷ்வால் கபூர், மத்திய அரசில் ஊழியராக இருந்தவர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123- வது பிரிவின் 7- வது விதிப்படி அரசு ஊழியர்கள் தேர்தல் முகவராகச் செயல்படக் கூடாது. அதைச் சுட்டிக்காட்டி, கடந்த 1975- ஆம் ஆண்டு இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!

கடந்த 2017- ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாங் கைஹேய் ஊக்ரம் ஹென்றே பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023- ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தின் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் சி.பி.எம். வேட்பாளரின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

MUST READ