
வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்புரையாற்றவிருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31- ஆம் தேதி முதல் பிப்ரவரி 09- ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தலுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனினும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, கவர்ச்சிக்கரமான திட்டங்கள் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய பட்ஜெட் குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், இதுவே கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.