பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்-வைரல் வீடியோ
கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Student]()
கர்நாடக மாநிலம் கோட்டேஷ்வர் அருகே வாக்வாடியில் கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை, நசீர் என்கிற 35 வயதுடைய நபர் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. உடனே மாணவி சத்தமிட்டுள்ளார். இதை பார்த்து அவரை பொதுமக்கள் சிறைபிடிக்க, அப்பெண் நசீரை செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் குந்தபுரா தாலுகாவில் கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, நசீர் என்கிற 35 வயதுடைய நபர் அவரை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்து அவரை பொதுமக்கள் சிறைபிடிக்க, அப்பெண் நசீரை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. #Karnataka pic.twitter.com/M0iXJck2nm
— Idam valam (@Idam_valam) June 10, 2023
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், நசீரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மாணவி அளித்த புகாரின்பேரில், நசீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.