ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று (பிப்.17) தொடங்கிய நிலையில் இன்று விண்ணில் பாய்கிறது.
போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!
இஸ்ரோ வடிவமைத்த ‘இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோளுடன் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டது ‘இன்சாட்- 3டிஎஸ்’ செயற்கைக்கோள். புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வானிலைக்கான தகவல்களைத் துல்லியமாக அளிக்கும்.
565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!
2.275 கிலோ எடைக் கொண்ட இன்சாட்- 3டிஎஸ்ஸில் 6 இமேஜிங் சேனல்கள் உட்பட 25 ஆய்வு கருவிகள் உள்ளன. புயல், கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட் வகை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.