
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
மக்களுக்காக ஜி.எஸ்.டி.யை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்பு சட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கும். அதேபோல், ஏதேனும் வழக்கு விசாரணையின் போது ஜி.எஸ்.டி. விவரங்களை அமலாக்கத்துறையிடம் தெரிவிப்பது கட்டாயம்.
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார புலனாய்வு அமைப்புகளிடம் ஜி.எஸ்.டி. விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் என்றும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையைக் கண்டறிய உதவும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.