- Advertisement -
மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர் ஷோரூமில் பயங்கர தீ
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குகட்பள்ளி கே.பி.ஹெச்.பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர் ஷோரூமில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததையடுத்து, நள்ளிரவு இரண்டு மணி வரை போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தில் பல 1 கோடி மதிப்புள்ள பர்னிச்சர் தீயில் எரிந்து சேதம் ஆனதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.