Homeசெய்திகள்இந்தியாகர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்!

கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்!

-

- Advertisement -

 

கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்!
File Photo

மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சுமார் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி, கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இன்று (மே 15) டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று (மே 15) மாலைக்குள் கர்நாடக மாநில முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கினியாவில் இருந்து கடத்தப்பட்ட 1,539 கிராம் போதைப்பொருள் பறிமுதல்!

இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பையும், மத வெறியையும் விரட்டி அடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ