Homeசெய்திகள்இந்தியா"வாக்களிக்க வேண்டாம்" என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

-

- Advertisement -

 

"வாக்களிக்க வேண்டாம்" என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற மாவோயிஸ்டுகள், தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர்.

மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

வனப்பகுதியில் இருந்து வரும் மாவோயிஸ்டுகள் ஊருக்குள் சென்று மக்களிடம் பேசுவது, உணவுப் பொருட்களை வாங்கிச் செல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் கூட வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் காவல்துறையினர் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்றது.

இந்த நிலையில், கம்பம் மலைப்பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு மாவோயிஸ்டுகள் அமைப்பைச் சேர்ந்த சிபி மொய்தீன், சந்தோஷ், சோமன், மனோஜ் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். மக்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை மக்களுடன் பேசிய மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். தங்கள் பிரச்சனைகளுக்காக நகர் பகுதிக்கு வந்து மாவோயிஸ்டுகளை போராட சொல்லி மக்கள் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டனர்.

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

அதற்கு மக்களுக்காக தாங்கள் எந்த இடத்திலும் போராடுவோம் என சொல்லிவிட்டு, அந்த நான்கு மாவோயிஸ்டுகளுக்கு வனப்பகுதிக்கு சென்றுவிட்டனர். இது குறித்து தகவலறிந்துச் சென்ற கேரளா காவல்துறையினர், வனப்பகுதிக்குள் சென்ற மாவோயிஸ்டுகளைத் தேடி வருகின்றனர்.

அடிக்கடி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் வரும் நிலையில், முதன்முறையாக மக்களுடன் மாவோயிஸ்டுகள் கலந்துரையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

MUST READ