ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, கேரளா மாநில மக்கள் பெரும் அளவு, விமானங்களில் சொந்த ஊர் செல்வதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை அடுத்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு செல்லும் விமானங்களில், விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு.
கேரள மாநில மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை செப்டம்பர் 15 ஆம் தேதி, கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கேரள மாநில மக்கள், ஓணம் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பெருமளவு கேரள மாநிலத்திற்கு, பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.
அதோடு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய் இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வழக்கமான கட்டணம் ரூ. 3404 ஆகும். ஆனால் இன்று கட்டணம் ரூ.11,928 முதல் ரூ.13,855 வரை இருந்து வருகிறது.
அதேபோல் சென்னையில் இருந்து கொச்சி செல்வதற்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.3,275 ஆகும். ஆனால் இன்றைய கட்டணம் ரூ. 6,567 முதல் ரூ.8,842 வரை உள்ளது.
‘தளபதி 69’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!
சென்னை கோழிக்கோடு இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,851 ஆகும். ஆனால் இன்றைய கட்டணம் ரூ. 10,913 முதல்,ரூ. 21,740 வரை என கூறப்படுகிறது.
விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து இருந்தாலும், சொந்த ஊரில் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், கேரள மக்கள் அதிக கட்டணங்கள் செலுத்தியும் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அதோடு சென்னையில் இருந்து கேரளாவுக்கு நேரடி விமானங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், பெங்களூர் ஹைதராபாத் வழியாக, கேரள மாநிலம் செல்லும் விமானங்களிலும் பயணிக்கின்றனர்.