- Advertisement -
பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை
தரமற்ற சோன்பப்டியை விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பதஞ்சலி நிறுவன நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் விற்கப்படும் பதஞ்சலி நிறுவன இனிப்பு பண்டம் தரமற்றது என புகார்கள் எழுந்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி அந்த இனிப்பு மாதிரியை ஆய்வாக்கத்திற்கு அனுப்பினர்.
அதில் பதாஞ்சலியின் சோன்பப்டி இனிப்பு தரம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பித்தோராகர் மாவட்ட நீதிமன்றம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் உதவி மேலாளர் அபிஷேக்குமார், உட்பட 3 பேருக்கு அபராதம் விதித்தது. மேலும் அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.