திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் அரசு அலட்சியமே முழு காரணம் பாரத சைத்தன்ய யுவஜனக் கட்சி தலைவர் ராமச்சந்திர யாதவ் கண்டனம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த பாரத சைத்தன்ய யுவஜனக் கட்சி தலைவர் ராமசந்திர யாதவ் திருப்பதியில் கூட்ட நெரிசலில் இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாமி தரிசனம் செய்ய வந்து இறந்தது துரதஷ்டமானது. ஆனால் இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் மாநில அரசும் தான் காரணம். முக்கிய பிரமுகர்கள், மாநில ஆளும் கட்சியினருக்கு சேவை செய்வதிலேயே அதிகாரிகள் உள்ளனர். சாமான்யா பக்தர்கள் விவகாரத்தில் கண்டு கொள்ளவில்லை அதனால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.