Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

-

- Advertisement -

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும் கூடுதல் தவணையாக ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 13,088.51 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 7,338.44 கோடியும், தமிழகம் மாநிலத்திற்கு ரூபாய் 2,976.10 கோடியும், மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ரூபாய் 5,488.88 கோடியும், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 2,952 கோடியும், கர்நாடகா மாநிலத்திற்கு ரூபாய் 2,660 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு ரூபாய் 2,537 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூபாய் 815.71 கோடியும், திரிபுரா மாநிலத்திற்கு ரூபாய் 516.56 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூபாய் 283.10 கோடியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூபாய் 4,396.64 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி, கிஷன் தாஸ் நடிக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’

மொத்தம் 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ