Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் பரபரப்பு: CJP பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் நேரில் பேச்சுவார்த்தை!

டெல்லியில் பரபரப்பு: CJP பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் நேரில் பேச்சுவார்த்தை!

-

- Advertisement -

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில், கராப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் டெல்லியில் உள்ள இந்தியா அரசியலமைப்பு கிளப் (Constitution Club of India) வளாகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.டெல்லியில் பரபரப்பு: CJP பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் நேரில் பேச்சுவார்த்தை!

3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்த கராப்பான் பூச்சி ஜனதா கட்சி: 2 கோரிக்கைகளில் அரசு சாதகமான நிலைப்பாடு எனத் தகவல்!
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் அது எவ்வித சார்புமற்ற நடுநிலையான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்று CJP தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அவர்களின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, நடுநிலையான இடத்தில் இரண்டாவது முறையாக இந்த உயர்நிலைச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

we-r-hiring

CJP முன்வைத்த 3 முக்கியக் கோரிக்கைகள்
இந்தச் சந்திப்பின் போது, மாணவர் போராட்டம் மற்றும் நீட் விவகாரம் தொடர்பாகத் தங்கள் தரப்பிலிருந்து 3 பிரதான கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர்களிடம் CJP பிரதிநிதிகள் முன்வைத்தனர்,

  • மத்திய அமைச்சரின் ராஜினாமா: நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை விலக வேண்டும்.
  • இழப்பீடு வழங்கல்: நீட் தேர்வு விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்.
  • வழக்குகள் ரத்து: நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.

டெல்லியில் பரபரப்பு: CJP பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் நேரில் பேச்சுவார்த்தை!

2 கோரிக்கைகளில் சாதகமான பதில்
சுமார் சில மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த CJP பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கைகளை அரசிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், தாங்கள் முன்வைத்த 3 முக்கியக் கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் சாதகமான நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். டெல்லியில் நடுநிலையான இடத்தில் நடைபெற்ற இந்த உயர்நிலைப் பேச்சுவார்த்தை, நீட் விவகாரத்தில் நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைத்துச் சுமூகத் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கான முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

“வினாத்தாள் கசிவைச் சவாலாக ஏற்றுச் சாதனை படைத்த மாணவர்கள்”: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

MUST READ