
உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ளது.
“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் இருக்கும் நிலையில், தற்போது 32 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். வரும் ஜூலை மாதம் மேலும் நான்கு நீதிபதிகள் பணியில் இருந்து ஓய்வுப்
பெறவிருக்கின்றனர்.
இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், காலியிடங்களை நிரப்பும் வகையில், உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு பரிந்துரைச் செய்துள்ளது.
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகிய இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
படத்துல தான் வில்லன், இனிமே என் மகனுக்கு ஹீரோ… மனம் நெகிழ்ந்த ‘துணிவு’ வில்லன்!
கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988- ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, சட்டப் பணியைத் தொடங்கியுள்ளார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில் வரும் 2031- ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியில் இருப்பார் என்றும், 2030- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.