Homeசெய்திகள்இந்தியாதெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

-

 

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!
Photo: Governor Dr Tamilisai Soundararajan

தெலங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஹைதராபாத்தில் இன்று (டிச.07) பிற்பகல் 01.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

கோடங்கல் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சராகத் தேர்வுச் செய்யப்பட்ட நிலையில் பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி, தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.

அதைத் தொடர்ந்து, தெலங்கானா மாநில துணை முதலமைச்சராக பட்டி விக்ரமார்க் மல்லு பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உடன் வெங்கட் ரெட்டி, பொன்னம் பிரபாகர் உள்ளிட்ட 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா – வானிலை அப்டேட் இதோ..

பதவியேற்பு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி எம்.பி., ராகுல் காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தெலங்கானா மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியமைத்துள்ளது.

MUST READ