கோலாகலத் தொடக்கம்: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர சலுகை மற்றும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது. அரசு சார்பில் சமர்ப்பணம்:
ஆந்திரப் பிரதேச அரசு சார்பில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பித்தார்.

பக்திப் பெருக்குடன் ஊர்வலம்: பட்டு வஸ்திரங்கள் அடங்கிய தட்டைத் தனது தலையில் சுமந்தபடி, மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அவர் கோயிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர சலவகை பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகத் தொடங்கியுள்ளது.
விழாவின் முதல் நாளான நேற்று, ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அரச முத்திரையுடன் கூடிய புனித பட்டு வஸ்திரங்களைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
முன்னதாக, பாரம்பரிய முறைப்படி வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்த பது வஸ்திரங்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பக்தியுடன் தனது தலையில் சுமந்தபடி பீர்யா இராஜ வீதிகளில் ஊர்வலமாகச் சென்றார்.
அவருடன் அவரது குடும்பத்தினரும் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ஆன்மீகப் பெருவிழாவில் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மூலவர் சன்னதியை அடைந்த அவர், தலைமைப் பூசாரிகளிடம் பட்டு வஸ்திரங்களைக் வழங்கி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகளை மேற்கொண்டார்.
வரும் நாட்களில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாக்காலங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இந்த நிகழ்வையொட்டி திருப்பதி மலை முழுவதும் பக்திப் பரவசத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
